1. Home
  2. தமிழ்நாடு

தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை ஜெயிப்பாரா ? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

1

லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.அதன்படி தந்திடிவி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி நிலவரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் தென்சென்னை தொகுதியில் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்பி ஜெயவர்தனும், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், நாம் தமிழர் சார்பில் தமிழ் செல்வியும் போட்டியிட்டுள்ளனர்.

இதில் தென்சென்னை தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 37 சதவீத ஓட்டுகள் பெற்று வெல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் 27 சதவீத ஓட்டுகளை பெற்று 10 சதவீத ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்படி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 19 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் என தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like