1. Home
  2. தமிழ்நாடு

வரும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் ?

1

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவுபெற்றது. அதேபோல், நான்காம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டுப் பரீட்சை நடந்துமுடிந்தது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தேர்வு நடந்து முடிந்தது. 

இந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்தே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியைக் கடந்து பதிவாகி இருந்தது. அந்த வகையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதாலும், மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தைக் குறைக்க, அதன் பின் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் தேர்தல் முடிவு, வெயில், மழை போன்ற காரணங்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி, தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளி கல்விதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like