1. Home
  2. தமிழ்நாடு

அரை இறுதிக்கு செல்லுமா நியூசிலாந்து அணி..? இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை..!

1

உலகக் கோப்பை போட்டியின் 41வது போட்டியில், பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இது இரு அணிகளுக்கும் லீக் கட்டங்களின் கடைசி ஆட்டமாக இருக்கும் மற்றும் இந்திய நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்கும்.

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இன்றைய ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்றால் 3 அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது அரையிறுதிக்குள் நுழைவது யார்? என்பதை ரன்-ரேட் தான் தீர்மானிக்கும். ரன்-ரேட்டில் நியூசிலாந்து வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் அடிக்கும்.

ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோற்று, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக்கில் வீழ்ந்தால் 3 அணிகளும் 8 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போதும் ரன்-ரேட் தான் அரையிறுதி வாய்ப்பை முடிவு செய்யும். எந்த முடிவு கிடைத்தாலும் நியூசிலாந்து தங்களது நிலையை உறுதி செய்ய இரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

Trending News

Latest News

You May Like