அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என்றாரா ஜெயக்குமார்? - உண்மை இதுதான்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவிலிருந்து விலகி விடுவேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. அதில், “பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒருவேளை மீண்டும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் - பத்திரிகையாளர் கேள்விக்கு ஜெயக்குமார் பதில்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
வைரல் கார்டின் நம்பகத் தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகிவிடுவேன் என ஜெயக்குமார் சொன்னதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது. ஜெயக்குமார் அப்படியான எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தவறான மற்றும் போலியான தகவல்... pic.twitter.com/3M0YR3BcBe
— D.JAYAKUMAR (@djayakumarfans) March 21, 2025
தவறான மற்றும் போலியான தகவல்... pic.twitter.com/3M0YR3BcBe
— D.JAYAKUMAR (@djayakumarfans) March 21, 2025