முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c7be925b672cd07be4998877901bc22f.jpg?width=836&height=470&resizemode=4)
மேற்கு வங்க மாநிலத்தில் ராய்கஞ்ச் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம். இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்கம் முக்கிய பங்கு வகிக்கும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தனித்து தான் போட்டியிடும்.
நீதித்துறையில் பா.ஜ., தலைவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்துகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சட்ட விரோதமானது. வேலை இழந்தவர்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.