1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா ? தமிழ்நாடு அரசு விளக்கம்

1

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மின் கட்டண உயர்வு தொடர்பான பதிவுகளை மறுபதிவு செய்து தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த தகவல்களை தற்போது தமிழ்நாடு அரசு, மின்வாரியம் ஆகியவை மறுத்துள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது. தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது. ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. 2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like