1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட மரணம் வருமா ? குழிமந்தி சிக்கன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு..!

1

கேரள மாநிலம் திருச்சூர் அருகே பெரிஞ்சனம் என்ற பகுதியில் ’ஜயின் ஹோட்டல்’ என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. இங்கு ஏமன் நாட்டில் பிரபலமாக உள்ள குழிமந்தி என்ற சிக்கன் பிரியாணி பிரபலமான உணவாக இருந்து வருகிறது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த உணவகத்திற்கு நேரில் வந்தும், பார்சல் வாங்கிச் சென்றும் ஏராளமானோர் உணவருந்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவு வகைகள் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு ஏராளமானோர் இந்த கடையில் உணவருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்தில் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனைவரும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில் குழிமந்தி சிக்கனுடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்ட 56 வயது நுசைபா என்ற மூதாட்டி திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்துள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கெட்டுப்போன முட்டை பயன்படுத்தி மயோனைஸ் தயாரிக்கப்பட்டதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி உயிரிழந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like