1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட மரணம் வருமா ? பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி மரணம்..!

1

கோவையை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு, அவர் புரோட்டா சாப்பிட்டு படுக்கச் சென்றார். ஆனால், காலையில் அவரது பெற்றோர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததை கண்டனர்.

உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள், கீர்த்தனா ஏற்கனவே மரணமடைந்ததாக தெரிவித்தனர். இது அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீர்த்தனா சாப்பிட்ட புரோட்டா எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை தொடர்ந்து, அந்த புரோட்டா மாவில் ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணம், அவரது பெற்றோர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like