1. Home
  2. தமிழ்நாடு

இப்படி கூட மரணம் வருமா ? ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி..!

1

மதுரையில் இருந்து அரசுப்பேருந்து 30 பயணிகளுடன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை தேனிமாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் ஓட்டிவந்தார். ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் வந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய பேருந்தில் இருந்து டிரைவர் தங்கப்பாண்டியன் திடீரென கீழேவிழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தங்கப்பாண்டியன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட முள்வேலியில் மோதிநின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த யாரும் காயம் அடையவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like