1. Home
  2. தமிழ்நாடு

பனை ஓலையை எரித்தால் பண பிரச்சனை தீருமா..?

1

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஒரே ஒரு பனை ஓலை. கிராமப்புறங்களில் இது சுலபமாக கிடைத்துவிடும். நீங்கள் நகர்ப்புறங்களில் இருந்தால் யாரிடமாவது சொல்லி இந்த பனை ஓலையை அமாவாசைக்குள் கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் வையுங்கள். அமாவாசை அன்று பரிகாரம் செய்ய வசதியாக இருக்கும். அமாவாசை அன்று உங்களுடைய முன்னோர்கள் திதி தர்ப்பணம் படையல் வழிபாடுகளை எல்லாம் முடித்துவிட்டு, குலதெய்வத்தை வேண்டி பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விட வேண்டும்.

எடுத்து வைத்திருக்கும் பனை ஓலையில் உங்களுடைய பிரச்சனையை ஒரு வரியில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு கடன் தீர வேண்டும் என்றால், கடன் சுமை தீர வேண்டும் என்று எழுதலாம். திருமணம் நடக்க வேண்டும் என்றால், விரைவில் திருமணம் நடக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டும் வீடு வாங்க வேண்டும் குறிப்பிட்ட இந்த பிரச்சனை விலக வேண்டும். இப்படி உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அந்த பனை ஓலையில் எழுத வேண்டும். முக்கியமான குறிப்பு எழுதாத பேனாவில் பனை ஓலையின் மேல் எழுத வேண்டும். நீங்கள் எழுதியது அடுத்தவர்கள் கண்களுக்கு தெரியக்கூடாது. எழுதாத பேனாவுக்கு பதில் வேப்பங்குச்சு, நெல்லி மரத்து குச்சு, மாதுளம் மரத்து குச்சி, இதுபோல ஏதாவது மர குச்சி பயன்படுத்தி கூட அந்த பனை ஓலையில் உங்களுடைய வேண்டுதலை ஒரு வரியில் எழுதி பூஜை அறையில் வைக்கலாம்.

அமாவாசை அன்று பனை ஓலையில் வேண்டுதலை எழுதி பூஜையறையில் வைக்க வேண்டும். அடுத்த 15 நாட்கள் அந்த ஓலை பூஜையறையில் இருக்க வேண்டும். பௌர்ணமி திதி வரும் நாளில் அந்த பனை ஓலையை எடுத்து நிலை வாசலில் கட்ட வேண்டும். மீண்டும் 15 நாட்கள் அந்த பனை ஓலை உங்கள் வீட்டு நிலை வாசலில் இருக்க வேண்டும். மீண்டும் வரக்கூடிய அமாவாசை நாளில் இரவு 9 மணிக்கு மேல் அந்த பனை ஓலையை எடுத்து, வீட்டிற்கு வெளியே நெருப்பில் கொளுத்தி விட வேண்டும். இதை நீங்கள் சரியான முறையில் பின்பற்றி செய்து முடித்து விட்டால், அந்த பனை ஓலையில் என்ன விஷயத்தை எழுதி எரித்தீர்கள், அந்த வேண்டுதல் நிச்சயம் நடந்துவிடும். இது ஆதி காலத்து பரிகாரம். ஒரு பெரிய பிரபல ஜோதிடரால் சொல்லப்பட்ட பரிகாரம்தான் உங்களோடு பகிரப்பட்டுள்ளது.

செலவு எதுவுமே இல்லை, உங்களுடைய நன்மைக்காக மட்டுமே இந்த பரிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பனை ஓலையை எடுத்து வர வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே இந்த பரிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வருட விசுவாவசு, சுத்திரை அமாவாசை அன்று இதை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கையில் சக்சஸ் நிச்சயம் உங்களை வந்து அடையும். இந்த அமாவாசை திதியில் இந்த பரிகாரத்தை செய்ய தவறவிட்டவர்கள், அடுத்த அமாவாசை திதிக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 

Trending News

Latest News

You May Like