1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் வருகிறதா மலிவு விலையில் பாரத் பால், பாரத் எண்ணெய்..?

1

இந்தியாவில் அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் மொத்தமாக குறைந்து தற்போது ஒவ்வொரு மாதமும் அதிரடியாக விலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஏற்கனவே பொதுமக்களுக்காக மானிய விலையில் பாரத் கோதுமை மாவு மற்றும் பாரத் பருப்பினை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது அரிசி விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் இருந்து பாரத் அரிசியும் கிலோ ரூ.29க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக அரிசி கிலோ ரூ. 40 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படும் நிலையில் பாரத் அரிசி ரூ. 29க்கு வழங்கப்படுவதால் பொது மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. பாரத் அரிசியை நீங்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் வாங்கலாம். பாரத் பிராண்டின் கீழ் முதலில் பருப்பு, பின்னர் மாவு மற்றும் இப்போது அரிசி ஆகியவற்றை இந்திய அரசு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. பாரத் அரிசி கிலோ ரூ.29க்கு இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 5 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது.

இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (என்ஏசிஎம்எஃப்) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகியவற்றில் இந்த அரிசியை வாங்கலாம். மொபைல் வேன்கள் மூலமாகவும் இந்த அரிசி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி தற்போது இல்லை. ஆனால் விரைவில் இந்த வசதி கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அரிசி, பருப்பு மற்றும் கோதுமையை தொடர்ந்து பாரத் பால் மற்றும் எண்ணெய் பொருட்களையும் மத்திய அரசு விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like