பாபா வாங்காவின் பயங்கர கணிப்பு பலிக்குமா?

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், அதன் நட்பு நாடுகளிடம் ராணுவ தளவாடங்களை வாங்கி குவித்து வருகிறது.
இந்தியாவின் ராணுவம், கடல் மற்றும் விமானப் படைகளின் தயார்நிலையைக் கண்டு மிரண்டுள்ளது பாகிஸ்தான். இந்நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய அரசு உறுதிப்பட தெரிவித்துள்ள நிலையில் பாபா வங்காவின் கணிப்பு வைரலாகி வருகிறது.
அதாவது பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானைப் பற்றி ஒரு கணிப்பை குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாபா வங்காவின் அந்த கணிப்பு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இந்திய-பாகிஸ்தான் போர் அல்லது குறிப்பாக பாகிஸ்தானின் அழிவு குறித்து அவர் தெளிவான அல்லது நேரடியான கணிப்புகளை கூறவில்லை.
இருப்பினும், அவரது சில அறிக்கைகள் பாகிஸ்தானில் அழிவு மற்றும் பேரழிவுக்கான சாத்தியத்தை கூறும் வகையில் உள்ளது. இந்திய - பாகிஸ்தான் இடையே போர் மூளும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் கூறாத நிலையில் பாகிஸ்தானில் பேரழிவு ஏற்படும் என பாபா வங்கா கணித்திருப்பதால், மக்கள் போர் பதற்றத்துடன் தொடர்புப்படுத்தி வருகின்றனர்.
பாபா வங்கா 2025 ஆம் ஆண்டிற்கான சில பொதுவான கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் வெடிக்கும் என கணித்துள்ளார். மேலும் சில நாடுகள் பேரழிவை சந்தித்து நாகரீகம் அழிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். 1947, 1965, 1971 மற்றும் 1999 (கார்கில் போர்) ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்கள் நடந்துள்ளன.
இந்தப் போர்களில் பலவற்றில், பாகிஸ்தான் ராணுவம் தோல்வியைச் சந்தித்தது.இந்நிலையில் ஐரோப்பாவில் ஏற்படும் இந்த மோதலால் சில நாடுகள் சரிவை சந்திக்கும் என்றும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். இதுதான் பாகிஸ்தான் விவகாரத்தில் பலிக்குமா என கேள்வியை எழுப்பியுள்ளது.
பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்கா தனது கணிப்புகளின் மூலம் பிரபலமானவர். இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. அவரது கணிப்புகளில் 85% இன்றுவரை உண்மையாகியிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போர், சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ஆகியவை பாபா வங்காவின் கணிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.