1. Home
  2. தமிழ்நாடு

மனைவி கொடுத்த புகார்..! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது..!

Q

சென்னை கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், தையூரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சுகாதாரத்துறை முன்னாள் செயலருமான பீலா வீடு உள்ளது. இவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேஷ்தாசை காதலித்து, 1992ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, பிங்கி, பிரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராஜேஷ்தாஸ், அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்தார். பின், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி தண்டனை பெற்றார். அவரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக, ராஜேஷ் தாசிடம் இருந்து விலகி, பீலா தனியாக வசித்து வருகிறார். அவர் சட்ட ரீதியாக விவாகரத்து பெறவும் முயற்சி செய்து வருகிறார். பிரிந்து இருக்கும் மனைவி பீலாவின் வீட்டிற்கு ராஜேஷ் தாஸ், 10 நபர்களுடன் சென்று, அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார்; காவலாளியையும் மிரட்டி உள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தையூர் பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கி அத்துமீறி நுழைந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராஜேஷ் தாஸின் முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் அளித்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்த கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like