"இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்?" : ராகுல்காந்தி கேள்வி!
இந்திய-சீன எல்லை பிரச்னை குறித்து பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவலில்லை, ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பிறகு பேசி இருந்தார். நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். இது குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்குள் யாரும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்படியென்றால் ஏன் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்?, எங்கே வைத்து கொல்லப்பட்டனர் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
newstm.in