உயர்நீதிமன்ற கேள்வி : தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை?

அப்போது, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சங்கம் இருக்கும்போது காவலர்களுக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை என கேள்வி எழுப்பினார். மேலும் ஆந்திரா, கேரளாவில் காவலர்களுக்கு சங்கம் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி பட்டு தேவானந்த், தமிழ்நாட்டில் காவலர்களுக்கு சங்கம் இல்லாதது ஜனநாயகமா எனவும், இது மனித உரிமை மீறல் இல்லையா எனவும் வினவினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் காவலர்கள் இருக்கும்போது ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்திருப்பது உயர் அதிகாரிகள் மீதான அச்சத்தை வெளிப்படுத்துகிறதா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதி பட்டு தேவானந்த், காவலர்களுக்கு வார விடுமுறை வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என வினவினார். மேலும், வார விடுமுறை தொடர்பான அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது என தமிழ்நாடு டிஜிபி வரும் வியாழக்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.