1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,!

Q

சென்னை, சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:
டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச வேண்டும். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் தான் கேள்வி கேட்கிறோம்.
டாஸ்மாக்கில் ரூ.ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்த போது, நாங்கள் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கேட்டோமா? கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது?
கச்சத்தீவு தி.மு.க., ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட, அதை முதல்வர் மறைக்க பார்க்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்னைகளை சந்திக்கவில்லையா? கடந்த 4 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்னைகளை சந்திக்கவில்லையா? எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்த பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.
டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க., அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால் தி.மு.க., செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Trending News

Latest News

You May Like