1. Home
  2. தமிழ்நாடு

இந்த விவகாரத்தில் கண்டும் காணாமலும் போலீசார் இருப்பது ஏன்? முதல்ல விஜய்க்கும், தனுஷுக்கும் போதைப்பொருள் டெஸ்ட் எடுங்க..!

1

சினிமா பின்னணி பாடகி சுசித்ரா கடந்த காலங்களில் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை பற்றி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில், சில ஆண்டுகளாக லைம் லைட்டில் வராத சுசித்ரா, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர்கள் தனுஷ், விஜய் உள்ளிட்டோர் போதைப்பொருட்களை உட்கொள்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரையும், தனுஷையும் இணைத்தும் சுசித்ரா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் இன்று ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சுசித்ரா தனது பேட்டியில் சுட்டிக்காட்டிய நடிகர், நடிகைகளை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், வெளியே இருந்த செய்தியாளர்களிடம் வீரலட்சுமி கூறுகையில், "போதைப்பொருளின் தீமைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கும் திரைத்துறையினரே, கொக்கைன் போன்ற கொடிய போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக பின்னணி பாடகி சுசித்ரா தெரிவித்து இருக்கிறார். தளபதி விஜய், தனுஷ், நடிகை திரிஷா, ஆண்ட்ரியா, விஜய் ஏசுதாஸ், சுசித்ராவின முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஆகியோர் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் கொக்கைன் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக சுசித்ரா வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

பிரபல நடிகர்கள் பற்றி ஆதாரம் இல்லாமல் சுசித்ரா கூறியிருக்க வாய்ப்பு இல்லை. சாதாரண இளைஞர்கள் கஞ்சா குடித்தாலோ, அதை விற்றாலோ அவர்களை பிடித்து சிறையில் அடைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யும் போலீஸார், இந்த விவகாரத்தில் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்? எனவே, மதுவிலக்கு அதிகாரிகள் உடனடியாக பாடகி சுசித்ராவிடம் இதுபற்றி தீர விசாரிக்க வேண்டும். அதன் பின்னர், அவர் கூறிய நடிகர், நடிகைகள் அனைவரிடமும் போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், இவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மாஃபியா கும்பலையும் போலீஸார் கைது செய்ய வேண்டும்.

அது மட்டுமல்லாமல், சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவாக பேசி இருக்கிறான். ஏதோ அவர்கள் மட்டும்தான் கெட்ட வார்த்தை பேசுவதை போல கார்த்திக் குமார் சொல்லி இருக்கிறான். இப்போது அது தன்னுடைய குரலே அல்ல என்று அவன் சொல்கிறான். இதனால் போலீஸார், அந்த ஆடியோவை பரிசோதித்து, அது கார்த்திக் குமாரின் குரலா என உறுதி செய்ய வேண்டும். அப்படி அவனது குரலாக அது இருந்தால், அவன் மீது எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வீரலட்சுமி கூறினார்.

Trending News

Latest News

You May Like