1. Home
  2. தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் தொடங்கியது.. மக்களுக்கு அனுமதி மறுப்பு !

கோயம்பேடு சந்தையில் மொத்த பழ வியாபாரம் தொடங்கியது.. மக்களுக்கு அனுமதி மறுப்பு !


தமிழகத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா தொற்று பல மாவட்டங்களுக்கு பரவியதால் சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. பல்வேறு நகரங்களுக்கு சந்தை மாற்றப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ளதால் வியாபாரிகள் கோரிக்கையை அடுத்து சந்தை திறக்கப்பட்டது.

ஆனால் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பழ வியாபாரத்திற்கும், சில்லரை வணிகத்திற்கும் தடை நீட்டிக்கப்பட்டதால் வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உடனடியாக வியாபாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில், நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, கோயம்பேடு சந்தையில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து கோயம்பேடு சந்தையில், பழ அங்காடியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட வடிவமைப்பாளர் பெரியசாமி மற்றும் அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சரக்கு வாகனங்கள் மூலம் பழங்கள் அனுமதிக்கப்பட்டன. வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

சந்தைக்குள் பயணிகள் ஆட்டோ மற்றும் பைக்குகள் செல்ல அனுமதி இல்லை. சில்லறை வியாபாரமும், தனி நபர் கொள்முதலும் செய்ய அனுமதியில்லை என அறிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like