1. Home
  2. தமிழ்நாடு

யாரு சாமி நீ..? வங்கி மோசடியில் இருந்து தப்பிக்க தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி விளம்பரம் கொடுத்த நபர்...!

Q

கோட்டயத்தை  சேர்ந்தவர் சஞ்சீவ். இவர், அப்பகுதியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் பெட்டி வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன.

போலி ஆவணங்கள் தாக்கல்
இந்த நிலையில் உள்ளூர் வங்கி ஒன்றில் அவர் சுமார் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று இருக்கிறார். பின்னர் தான் வங்கியில் தணிக்கை நடத்திய போது சஞ்சீவ் சமர்ப்பித்திருந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.
போலீஸாருக்கு அதிர்ச்சி
இதனால் திடுக்கிட்ட வங்கி நிர்வாகம் சஞ்சீவ் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் உள்ளூர் செய்தித் தாள்களில் வந்த விளம்பரம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சஞ்சீவ் இறந்து விட்டதாக விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது.
சென்னையில் சஞ்சீவ் பணியாற்றி வந்த போது உயிரிழந்ததாகவும், அவரது சடலத்தை அடையாறு இடுகாட்டில் தகனம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சஞ்சீவ் முதலான திருட்டு வழக்கை போலீசார் கிடப்பில் போட்டனர்.
இந்த நிலையில் தான் அவர் தமிழகத்தில் கொடைக்கானல் அருகே பதுங்கி இருப்பதாக கோட்டயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது சஞ்சீவ் அங்கே தலைமறைவாக இருந்து வந்தது கண்டறியப்பட்டது.
அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக மலையாள செய்தித் தாள்களில் தானே போலியாக விளம்பரம் கொடுத்து தான் இறந்து விட்டதாக பொதுமக்களையும் போலீசாரையும் நம்ப வைத்ததாக சஞ்சீவ் வாக்குமூலம் அளித்தார்.

Trending News

Latest News

You May Like