மத்திய பட்ஜெட் அறிவிப்பால் எந்தெந்த பொருட்கள் விலை உயர்கிறது..? எந்தெந்த விலை குறைகிறது..!

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி விலையேறும் மற்றும் விலை குறையும் பொருட்களின் விபரங்கள் வருமாறு:
இந்த பட்ஜெட்டின்படி 37 க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய உள்ளது. அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது.
இதுதவிர கோபால்ட் புராடெக்ட்டுகள், எல்இடி, ஜிங்க், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது. மேலும் 12 அரிய மினரல்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது.
லெதர், ஜாக்கெட், ஷு, பெல்ட், பர்ஸ் உள்ளிட்டவற்றின் பொருட்கள் குறைக்கப்பட உள்ளது.பதப்படுத்தப்பட்ட மீன் பேஸ்ட் (சுரிமி) மீதான ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களுக்கான open cells and other components-க்களான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை என்பது குறைய வாய்ப்புள்ளது.
விலை உயரும் பொருட்கள்:
interactive flat panel மீதான அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் வரி என்பது அதிகரிக்கப்பட உள்ளது. இது தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் எதிரொலிக்கப்படலாம் என்பதால் அதன் விலை உயர வாய்ப்புள்ளது. கூடுதலாக, நிதியமைச்சர் தற்காலிக மதிப்பீட்டிற்கான கால வரம்பை இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்க முன்மொழிந்தார்.
மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில், மக்காத பிளாஸ்டிக்குகளுக்கான சுங்க வரியை 25 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான அடிப்படை சுங்க வரியும் 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது. இதனால் அதன் விலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது,