1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பிணி மனைவி கோரிக்கை : என் புருஷனை பாகிஸ்தானிடம் இருந்து எப்போ மீட்டு தருவீங்க..?

1

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் தலைமையில் அடுத்தடுத்து அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன. இதறகிடையே இந்திய பி.எஸ்.எப். வீரர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அதாவது எல்லைத்தாண்டி சென்றதாக கூறி இந்திய வீரரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து சென்றது.

இந்திய பிஎஸ்எப் வீரரான பூர்ணவ் சாகு என்பவர் பஞ்சாப் ராணுவ எல்லையில் பணி செய்துள்ளார். அப்போது மரத்து அடியில் ஓய்வு எடுத்து விட்டு புறப்பட்டபோது வழிதவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கோடை காலம் என்பதால் ஆறுகள் வறண்டன. இதன் காரணமாக எல்லை தெரியாமல் அவர் சென்றுள்ளார். அவரை ராணுவ வீரர்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது அவரை ராணுவத்தினர், பிடித்து அடைத்து வைத்துள்ளனா். அவரை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பாகிஸதான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பலன் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது கணவரை மீட்டு கொடுக்க வேண்டும் என கோரி பூர்ணவ் சாகுவின் மனைவி களத்தில் இறங்கி உள்ளார். தற்போது அவர் பஞ்சாப் பெரோஷ்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் அவரது மனைவி கூறுகையில்,"ஒரு ராணுவ வீரராக, நாடு என் கணவரைப் பற்றி கவலைப்படுவதை நான் அறிவேன். ஆனால் ஒரு மனைவியாக, நான் அவரைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். அவர் பாகிஸ்தான் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் போது நான் வீட்டில் உட்கார முடியாது" என்று பூர்ணவின் மனைவி ரஜினி கூறினார்.

Trending News

Latest News

You May Like