1. Home
  2. தமிழ்நாடு

சசிகலா வெளியே வந்ததும் நிச்சயம் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்.. முன்னாள் அமைச்சர் பகீர் !

சசிகலா வெளியே வந்ததும் நிச்சயம் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்.. முன்னாள் அமைச்சர் பகீர் !


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே சுதந்திர போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரனின் 117-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். தற்போது பாஜக தென்மண்டல பொறுப்பாளராக உள்ள நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர் வேட்பாளர் மோதல் விவகாரம் அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி கருத்து கூற முடியாது.

சசிகலா விடுதலை தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என கூறினார்.

சசிகலா வெளியே வந்ததும் நிச்சயம் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்.. முன்னாள் அமைச்சர் பகீர் !

ஏற்கனவே பலரும் இதுபோன்ற கருத்துகளை கூறிவரும் நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை என தெரிவித்தனர்.

ஆனால் ஒருசில அமைச்சர்களோ சசிகலா தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றுவிடுகின்றனர். இந்த சூழலில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. எனவே சசிகலா விடுதலைக்கு பின் மாற்றம் வரும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like