1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் புறநகர் ரயில்சேவை எப்போது? முதல்வர் கடிதம்!



சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்கெனவே தடைபட்டிருந்த பேருந்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவத்து உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் புறநகர் ரயில்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் புறநகர் ரயில்சேவை எப்போது? முதல்வர் கடிதம்!

எனவே சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ள முதமைச்சர் பழனிசாமி, புறநகர் ரயில் சேவையை தொடங்க செப்டம்பர் 2ஆம் தேதி தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like