மாதாந்திர மின் கணக்கெடுப்பு எப்போது..? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு..!

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடுவதால், அதிக கட்டணம் செலுத்த நேர்கிறது என்று நீண்ட காலமாக மக்கள் முறையிடுகின்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின் நுகர்வு கணக்கிடும் திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மின்துறை அமைச்சர்,
''ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும், மாதாந்திர கணக்கெடுப்பு நடைமுறைக்கு வரும்!”
ஸ்மார்ட் மீட்டர் இன்னும் ஏன் பொருத்தவில்லை?
“ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. நாம் எதிர்பார்த்த குறைந்த விலைப்புள்ளி கிடைக்கவில்லை. எனவே, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது; புதிய டெண்டர் கோரப்படும்,” என அமைச்சர் கூறினார்.
''வோல்டேஜ் பிரச்னை ஏற்படும் இடங்களில் 5,407 டிரான்ஸ்பாமர்கள் அமைத்துள்ளோம்; மேலும் 1,129 நிறுவப்படும். 2,000 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை சேமிக்கும் 'பேட்டரி ஸ்டோரேஜ்' அமைக்கப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.