1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மீகம் அறிவோம் : செவ்வாய்க்கிழமையில் என்ன செய்யலாம்..? என்ன செய்ய கூடாது..?

1

செவ்வாய்க்கிழமையில் என்ன செய்யலாம் ?


* நவகிரகங்களுள் மிகச் சிறந்தது செவ்வாய் கிரகம் ஆகும். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்களகாரகன் என்று அழைக்கப்படுகிறார். செவ்வாய் என்றாலே மங்களகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

* முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

* செவ்வாய் ஆஞ்சநேயருக்கு உரிய நாளாக கருதப்படுவதால் இந்த நாளில் தங்கம், சமையலறை பொருட்கள், சிவப்பு நிற பொருட்கள் வாங்குவது சிறப்பு.

* செவ்வாய் கிழமையில் அம்பிகைக்கு விரதம் இருந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். வெற்றிகள் குவியும்.


* செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாய்க்கிழமையில் மங்களப்பொருட்கள் வாங்கினால் செல்வம் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லா சிறப்புகளும் தேடி வரும்.


* செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.


* செவ்வாய்க்கிழமை அன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம். செவ்வாய்க்கிழமை அன்று எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ, வெறும் வாயோ என்று அன்றைய தினம் விவாதம் செய்யாமல் மௌன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.


* செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி போன்றவற்றை செய்யலாம்.


* செவ்வாய்க்கிழமை அன்று பூமி பூஜை செய்வது நல்லது என்று மனையடி சாஸ்திரம் கூறுகிறது.

* பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம் செவ்வாய்க்கிழமை அன்று இருந்தால் உறுதியான வெற்றியை தரும்.

Trending News

Latest News

You May Like