என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்..? துணை தலைவர் உட்பட 500 பேர் கட்சியிலிருந்து விலகல்!

இன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நபர்களுக்கு மட்டும் தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன.
அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும் ரகு கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் பலர் விலகி வருவது ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சீமான் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை கட்சியினர் சமீபகாலமாக முன்வைத்து வருகின்றனர். அதனையடுத்து கூண்டோடு கட்சியிலிருந்து விலகியும் செல்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.