தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக எவ்வளவு ?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுமாராக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 7 பேரும், மதுரையில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் , தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது.
சென்னையில் 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 141 பேரும், திருப்பூரில் 110 பேரும், திண்டுக்கல்லில் 80 பேரும், ஈரோட்டில் 70 பேரும், நெல்லையில் 63 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், மதுரையில் 56 பேரும், நாமக்கல், தஞ்சையில் தலா 55 பேரும், திருச்சியில் 51 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Newstm.in