காலையில் நடந்த சோகம்..! 4 மருத்துவ மாணவர்கள் உடல் நசுங்கி பலி..!
இன்று அதிகாலை 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது கார் சின்ன காங்கேயனூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர், பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 மருத்துவக்கல்லூரி மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விவரத்தையும், எங்கு செல்லும் போது விபத்து நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு நடந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.