1. Home
  2. தமிழ்நாடு

கல்யாண வீட்டில் வைர நகை, ரூ. 3 லட்சம் திருட்டு.. மாக்ஸ் அணிந்து இளைஞர் கைவரிசை !

கல்யாண வீட்டில் வைர நகை, ரூ. 3 லட்சம் திருட்டு.. மாக்ஸ் அணிந்து இளைஞர் கைவரிசை !


சண்டிகரில் உள்ள சன்பீம் ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உஷா தாகூர் என்ற பெண் தனது மகளின் திருமணத்திற்காக தடல்புடலாக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்.

உஷா, மணமக்களுக்கு 3 லட்சம் ரொக்கத்தையும், ஒரு வைரமோதிரத்தையும் திருமண பரிசாக கொடுக்க முடிவு செய்து, அதனை தனது பர்ஸில் வைத்திருந்தார். பர்ஸில் கண்ணும் கருத்துமாக இருந்த அவரிடம் இருந்து அந்த பர்ஸ் எப்படியோ தொலைந்து போய்விட்டது.

கல்யாண வீட்டில் வைர நகை, ரூ. 3 லட்சம் திருட்டு.. மாக்ஸ் அணிந்து இளைஞர் கைவரிசை !

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களிடம் விசாரித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் பர்ஸ் கிடைக்காததால் கடைசியாக போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

அந்த பர்ஸில் இருந்த 3 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த ஒரு வைரமோதிரம், 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் மணமகளின் தாயாரிடம் இருந்தேஇக்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமிராவை சோதித்த போலீஸார் உறவினர்போல் வீட்டுக்குள் உலாவிய ஒரு நபர் முகமூடி அணிந்துகொண்டு பர்ஸை எடுத்துச் சென்றதை கண்டுபிடித்திருக்கின்றனர்.

மேலும் குற்றவாளியை போலீஸார் தேடிவருவதாகவும், பிரிவு 380இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பஸ் நிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like