1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் முதல் உற்பத்தியை நிறுத்த நாடா இல்லா தறி நெசவாளர்கள் முடிவு!

1

கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாடா இல்லா தறிகள் அதிக அளவில் இயக்கப்பட்டுவருகின்றன. தினமும் இங்கிருந்து 10 லட்சம் மீட்டர் காடா துணிகள் தயாராகிறது. இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி.

இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு வழங்கும் கூலியை குறைந்துள்ளதாக கூறும் நாடா இல்லா தறி நெசவாளர்கள், இந்த நிலைமை தொடர்ந்தால் துணி உற்பத்தி பாதிக்கப்படும், அதனால் ஜவுளி உற்பத்தி சார்ந்த அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என கூறுகின்றனர்.

இப்படியிருக்க, தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கம், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி தராவிட்டால் 2025 ஜனவரி 15ம் தேதி முதல் திருப்பூர், கோவை மாவட்டம் முழுவதும் நாடா இல்லாத தறிகள் உற்பத்தியை முழுமையாக நிறுத்தும் என அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like