1. Home
  2. தமிழ்நாடு

வானிலை மையம் எச்சரிக்கை..! கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கனமழை..!

Q

கோவையிலும், 2 நாட்களாக இரவு நேரங்களிலும் நகரின் புறநகர் பகுதியில் பல மணி நேரம் மழை கொட்டியது. இந் நிலையில்,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்;
ஆக.7ம் தேதி; கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர்.
ஆக.8ம் தேதி; கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி,சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி
ஆக.9ம் தேதி; செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like