1. Home
  2. தமிழ்நாடு

இனி சும்மா இருக்க மாட்டோம்..! இனி உதயநிதியை போதை உதயநிதி என்று அழைப்போம் - அண்ணாமலை..!

1

கோவை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது.

சீமான் தினம் ஒரு வார்த்தை ,தத்துவோம் என பேசுகிறார். டெல்லியில் சீமான் அப்ளை செய்யாமல் சின்னம் கிடைக்காததால் கோபத்தில் பேசுகிறார்.அவர் தவறு செய்து விட்டு எங்கள் மீது பலி போடுகிறார். முதல்வர் அப்போ அப்போ தமிழகத்தில் எட்டி பார்க்கிறார். நேரடியாக முதல்வர் களத்திற்கு வராததினால் கொள்ளையடிப்பது மட்டும் முழு வேலையாக அமைச்சர்கள் பார்க்கிறார்கள்.பிரதமரின் ரோடுஷோ முக்கிய நகரத்தில் நடக்க உள்ளது.பிரதமர் உழைக்க கூடிய செயலை தமிழக முதல்வர் செய்யவில்லை.

பணம் அதிகமாக உள்ளவர்களிடம் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர். 2024 -ல் பொய் வேஷம் போடுகின்றனர் திமுகவினர். கச்சத்தீவை நாங்கள் கையில் எடுத்த பின்பு மக்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. ஜனநாயக கடமையை செய்துள்ளோம். மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது. தந்தை பெயர், தாத்தா பெயர், வைத்துகொண்டு கொச்சையாக பேசுவது உதயநிதி, தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்.ட்ரக் ( போதை) உதயநிதி ஸ்டாலின், என இனி கூப்பிடுவோம் . கிராமத்தில் ,நகரத்தில், சம்பாதித்து டி.ஆர்.பி ராஜாவிற்கு வியர்வை சிந்தி இருக்கா?. அவர் அப்படித்தான் பேசுவார்.

கச்சத்தீவு குறித்து ஒரு திமுக அமைச்சர் ஆர்.டி.ஐ ரெக்கார்டு நாங்கள் அடிசோம் என்று சொல்கிறார்கள்,படித்த அமைச்சர். திமுக பணத்தை வைத்து கொங்கு மண்டலத்தை வென்று விடலாம் என நினைக்கிறார்கள் அது நடக்காது.

திருமாவளவன், சீமான் ,தக்காளி தொக்கா..? தியாகிகளின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், திமுக வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும், அவர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.ஹிந்தி திணித்தது காங்கிரஸ், திமுக நடத்த கூடிய பள்ளியில் ஹிந்தி இல்லை என்று சொல்லுங்கள் ,பிஞ்சு போன செருப்பை போடுகிறார்கள் அவர்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like