சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் - முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை கொளத்தூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கம் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
அரசு பணத்தை தி.மு.க., அமைச்சர்கள் சூறையாடுகிறார்கள் எனக்கூறும் பா.ஜ.,வின் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வேறு வேலை கிடையாது. அதனால் தான் சொல்லிக் கொண்டு உள்ளார். நாங்கள் ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் பணியை தீவிரப்படுத்தி பிரசாரத்தை துவக்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.