1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் ஒருபோதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - ஜெயக்குமார்..!

Q

நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக 2019 ஆம் ஆண்டு ஆதரித்துள்ளனர். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்கட்சிகள் தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், பொதுச்செயலாளரை பொறுத்தவரை அறிக்கை தெளிவாக வெளியிட்டிருக்கிறார். வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தினர். அப்போது ஏன் வாயை திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அடிப்படையில் தவறு செய்தவர்களே திமுக தான் என்று குற்றம் சாட்டினார். திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஆப்கன், பாகிஸ்தான் உடன், இலங்கையை சேர்க்கவேண்டும் என்று தான் கூறினார்கள். ஆனால், இந்த சட்டம் வேண்டாம் என்று கூறவில்லை என்று கூறினார். நாட்டைப் பிளவு படுத்தி பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, குட்கா, புகையிலை, போதை பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ராயபுரம் லோட்டஸ் ராமசாமி சாலையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பாஜக தேர்தல் பத்திரங்கள் நாட்டில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்கள் பாஜகவுக்கு யாரெல்லாம் கொடுத்தார்கள், திமுக உட்பட மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்பது வெளியில் வரப்போகிறது. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். பூர்வீக குடிமக்களாக இருக்கின்ற இஸ்லாமியர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அதிமுக என்றைக்குமே வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டைப் பிளவு படுத்தி பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக நினைத்தால் அதிமுக முழுமையாக எதிர்க்து போராடும். இஸ்லாமிய மக்களுக்கு, சிறுபான்மையினர் மக்களுக்கு என்றும் உறுதுணையாக அதிமுக இருக்கும். தமிழ்நாட்டில் சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை அமல் படுத்த விடமாட்டோம் என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like