1. Home
  2. தமிழ்நாடு

400 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் முகேஷ் அம்பானியை கொலை செய்வோம்..!

1

முகேஷ் அம்பானியைக் கொலை செய்யப் போவதாகவும், அதை செய்யாமல் இருக்க 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஒரு மின்னஞ்சல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அந்த தொகையை 200 கோடி ரூபாயாக அதிகரித்து, மின்னஞ்சல் வந்த நிலையில், தற்போது 400 கோடி ரூபாய் கோரி, மூன்றாவதாக ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை அறிய, மும்பை காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

ஷதாப்கான்@மெயில்ஃபென்ஸ்.காம் என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கும் நிலையில், அது குறித்த விவரங்களை இன்டெர்போல் வாயிலாக, பெல்ஜியம் நாட்டில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து மும்பை காவல்துறைக் கோரியுள்ளது.

மின்னஞ்சல் விடுத்த நபர், வேறு ஏதோ ஒரு நாட்டில் இருந்தவாறு, பெல்ஜியம் விபிஎன் வசதிகளைப் பயன்படுத்தி, மிரட்டல் விடுத்து வருவதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கிறது.

Trending News

Latest News

You May Like