1. Home
  2. தமிழ்நாடு

கேஸ் சிலிண்டரை 500 ரூபாய்க்கு தருவோம்... இது தான் என் முதல் வாக்குறுதி. - கதிர் ஆனந்த் பரபரப்பு பேட்டி..!

1

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்த், மிகவும் இயல்பாக பிரச்சாரத்தில் பேசி வருகிறார். அவர் மக்களுடன் மக்களாக அவர்களது குடும்பத்தில் ஒருவராக இருப்பதால் சகஜமாக பேசி வருகிறார்.

பிரச்சாரத்தின் போது பேசிய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், "கடந்த தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். கடந்த தேர்தலில் கைத்தறி பூங்கா அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தேன். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. தேர்தல் முடிந்தவுடன் கைத்தறி பூங்கா அமைக்கப்படும். இதனால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும். ஆகவே நான் செய்ததை சொல்லி உங்களிடம் வாக்கு கேட்கிறேன் என்றார்.

இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது,திமுகவிற்கு அமோகமான வெற்றி வேலூர் தொகுதியில் மட்டுமில்லை தமிழ்நாடு முழுவதும் காத்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை தளபதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது, வரவேற்பு பெற்றுள்ளது. அடிப்படை தேவைகள், கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அதுவும் மக்களுக்கு அன்றாட தேவைப்படக்கூடிய திட்டங்கள் தேர்தல் அறிக்கையாக நமது முதல்வர் கொடுத்து இருக்கிறார்.     

1

மேலும் அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது, ஒரு சவரன் தங்க நகை 51500 தாண்டி செல்கிறது. இதை சாமானியன் மக்கள் வாங்க முடியுமா ? எங்களால் காசு கொடுத்து வாங்க முடியாது என கூறும் மக்களிடம் நான் சொல்வது என்னவென்றால்... கேஸ் சிலிண்டரை 500 ரூபாய்க்கு தருவோம்... இது தான் என் முதல் வாக்குறுதி.   டோல் கேட் கட்டணம் ஏற்றம் என அறிவித்த 2 மணி நேரத்திற்குள் வாபஸ் பெறுகிறார்கள் என்றால் அதற்கு தோல்வி பயம் தான் காரணம்.பெண்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பல திட்டங்களை அறிவித்துள்ளார் நம் முதல்வர் ஸ்டாலின் என பேசினார். 

நீங்கள் இப்போ சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது எனவும் கூறினார்.           

Trending News

Latest News

You May Like