1. Home
  2. தமிழ்நாடு

இப்படியொரு தேர்தல் முடிவு வரும் என நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை - ஜெகன்மோகன்!

1

ஆந்திர பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஜனசேனை கட்சி 21 தொகுதியிலும் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன், மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம், மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் ஜெகன் மோகன் கூறியுள்ளார்.

மேலும் ஆந்திர மாநில பேரவைத் தேர்தல் இப்படியிருக்கும் என கற்பனைக்கூட செய்யவில்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like