நாங்கள் விஜய் உடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளோம் – ரவீந்திரநாத்..!
தேனி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி. ரவீந்திரநாத், திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன் என்று அவரே கூறியிருக்கிறார்.
தேனி மக்களுக்கு டிடிவி தினகரன் மிகவும் பரிச்சயமானவர். நான் வேறு அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. அதன் காரணமாகவே டிடிவி தினகரனுக்கு தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தோம்.
மேலும் பேசிய அவர் ஜனநாயக நாட்டில் அனைவரும் அரியலுக்கு வரலாம். நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அடுத்தக்கட்ட முயற்சியாக அரசியல் கட்சி தொடங்கி விட்டார். அந்தப் பாதையில் பயணித்து தமிழக மக்களுக்கு ஒரு நல்ல பாதைய வகுத்துத் தந்தால் அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என்றார்.