"தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
கருவிலேயே பல சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சமூகத்திற்கு குழந்தைகளைத் தருபவர்கள் அன்னையர்களே. எல்லா உறவுகளையும் ஒன்றிணைத்து தன்நலம் கருதாது வாழும் பெண் தெய்வங்களே அன்னையர்கள் ஆவர். அன்னையர் தினம் பழங்காலத்தில் பெண் கடவுள்களுக்கு வசந்த விழாவாக கொண்டாடப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழி நடத்திச் செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ பாத்திரங்களை வகித்தாலும் அவர்களுக்கு அன்னை என்ற பாத்திரமே மிக உன்னதமான பாத்திரமாகும்.
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும்.அன்னையர்கள் பல வித சவால்களைச் சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர்.இத்தகைய பெருமைக்கு உரிய அன்னையர்களுக்காகக் கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும்.
16-ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் தான் மதர்ஸ் சன்டே என்று முதன் முதலில் கொண்டாடப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது பிறந்தார். மேலும் அம்மை, டைபாய்டு மற்றும் டிஃப்தீரியா போன்ற நோய்களால் தனது உடன்பிறந்தவர்களில் சிலரை இழந்தார்.அவரது தாயார், ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ், தனது சொந்த அனுபவங்களால் உந்தப்பட்டு, குழந்தை இறப்பைத் தடுக்க தாய்மார்களுக்கு சுகாதாரத்தை கற்பித்தல் போன்ற தாய்மையை மையமாகக் கொண்ட காரணங்களுக்காக தனது வாழ்க்கையை செலவிட்டார்.
அன்னாவின் இளம் வயதில் அவரது தாயார், அன்னையர் தினம் ஒன்று வேண்டும்” என்றார். அவர் வளர்ந்தபோது, அன்னா ஒரு 'அன்னையர் தினம்' ஸ்தாபனத்தை தனது வாழ்க்கையின் பணியாக மாற்றினார். அவர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் தேவாலயத் தலைவர்களுக்கு தனது ஆதரவைப் பெறுமாறு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தாய்மார்களைக் கொண்டாடும் நாளாக அர்ப்பணிக்கப்பட்டது. அதாவது, அவள் அம்மா இறந்த மே 9 ஆம் தேதிக்கு அருகில் இருக்கும் என்று குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்தாள்.1908 ஆம் ஆண்டில், அவரது சொந்த ஊரான கிராஃப்டன் மற்றும் பிலடெல்பியாவில் இரண்டு பெரிய அன்னையர் தின நிகழ்வுகள் நடைபெற்றபோது அவரது முயற்சிகளுக்கு வெகுமதி கிடைத்தது. மே 8, 1914 அன்று, அன்னையர் தினத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான மசோதாவில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் கையெழுத்திட்டார்.
பின்னர், அன்னையர் தின கொண்டாட்டங்கள் வாழ்த்து அட்டைகள் மற்றும் மிட்டாய்களாக மாறியதால், இந்த நிகழ்வை வணிகமயமாக்குவதற்கு அன்னா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏனென்றால் வீட்டில் தனது குடும்பத்தை பராமரிக்கும் தாயை, சிறந்த தாய் எனக் கொண்டாடுங்கள் என்றார்.
அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொட்டியே அன்னையர் தினம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வுலகில் அன்னையரை தவிர வேறு யாராலும் அதீத அன்பை கொடுத்து விட முடியாது. அன்பின் அடையாளமாய் திகழ்பவர்கள் அன்னையர்களே.பாராட்டி, சீராட்டி வளர்த்த அன்னைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த சமூகத்தில் தான் பெற்ற பிள்ளைகள் பண்புடனும், பணிவுடனும், நற்பழக்கவழக்கங்களுடனும் வளர்ந்து வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதே ஒவ்வொரு அன்னையரதும் உச்சபட்ச விருப்பமாகும். அதனை நிறைவேற்றி அன்னையரை மகிழ்விப்பது நமது தலையாய கடமையாகும்.