நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல ஆட்சியில் பங்கு கொடுக்க - எடப்பாடி பழனிசாமி..!
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.அவர் திருத்துறைப்பூண்டிக்குச் சென்ற போது கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து மக்கள் பதாகைகளுடன் காத்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி பேருந்தில் இருந்தபடியே பதாகைகளை பெற்றுக்கொண்டார். திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்களிடம் அவர் உரையாற்றினார்.
"திருத்துறைப்பூண்டி நகரம் குலுங்குகின்ற அளவுக்கு மக்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது" என்று அவர் கூறினார். கூட்டணியை நம்பி இருக்கும் ஸ்டாலின், திருத்துறைப்பூண்டியில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். மக்களின் எழுச்சியே வெற்றிக்கான சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் நேருவை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற கூட்டத்தொடர் பாதியிலேயே போனதாகவும், அவரது தம்பி, மகன் வீடுகளில் தான் ஐ.டி., அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்ததாகவும் குறிப்பிட்டார். "உங்க முதுகில் அழுக்கை வச்சிகிட்டு எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது..?" என்று அவர் கேட்டார். நேரு பொய் பேசுவதாகவும், நடக்காத ரெய்டை நடந்த மாதிரி பேசுவதாகவும் சாடினார். முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும், ஸ்டாலினை நம்பினால் அவ்வளவுதான் என்றும் எச்சரித்தார். தேர்தல் நேரத்தில் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பீர்கள் என்றும் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். பெரும்பான்மை நிரூபிக்கும்போது திமுக MLA-க்கள் டான்ஸ் ஆடினார்கள் என்றும், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்கள் என்றும் அவர் கூறினார். ஸ்டாலின் சட்டையை கிழித்து வீதியில் போனார் என்றும் அவர் விமர்சித்தார். இதுவரை 31 தொகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது ஸ்டாலின் சட்டை வேட்டி இல்லாமல் போவீர்கள் என்றும் கூறினார்.
2011-21 அதிமுக ஆட்சி சாதனைகளை ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு பேசுங்கள் என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறினார். கடந்த நான்காண்டுகளில் மட்டும் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றும், இந்த ஆண்டு 1 லட்சம் கோடி கடன் வாங்கப்போகிறார்கள் என்றும், மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்டாலின் இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் என்றும், கடன் வாங்குவதில் முதல் மாநிலம் என்றும் அவர் விமர்சித்தார். பொய் சொல்லவில்லை, உண்மையைச் சொல்கிறோம், அதுதான் நீங்கள் செய்திருக்கும் ஒரே சாதனை என்றும் அவர் கூறினார்.
யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொடுக்கலாம் என்றும், ஆனால் அந்த கடனை யார் கட்டுவது என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 75 ஆண்டுகாலம் ஆட்சி நடந்தது, 2021 வரை 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி மட்டும் தான் கடன் என்றும், இப்படி கடன் வாங்கும் ஆட்சி தேவையா என்றும் அவர் கேட்டார். கடனை வரி போட்டு தான் திருப்பி செலுத்த முடியும் என்றும், மக்கள் மீது தான் சுமை ஏறும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியின் நல்ல திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். ஏழைகளும் விஞ்ஞானக் கல்விக்காக அம்மா லேப்டாப் கொடுத்தார்கள், அதை திமுக கைவிட்டது என்றும், 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு 7300 கோடியில் லேப்டாப் கொடுத்தோம் என்றும் அவர் கூறினார். மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் இந்தத் திட்டம் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார். அம்மா இருசக்கர வாகனம், அம்மா மினி கிளினிக் எல்லாத்தையும் மூடிட்டாங்க என்றும் அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் மாணவியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறான். இன்று வரை குற்றவாளியைப் பிடிக்கவில்லை. இன்று அதே கும்மிடிப்பூண்டியில் இன்னொரு சிறுமிக்கும் பாலியல் கொடுமை நடந்திருக்கிறது. சிறுமி மூலம் பாட்டி வரை பாதுகாப்பில்லை. திறமையற்ற முதல்வர் ஆள்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு கேட்கிறார். நாங்க ஏமாளி இல்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை. எதைப்பத்தியும் கவலையில்லை. திமுகவை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையணும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. திமுகவை அகற்றவேண்டும் என்று பாஜகவும் கருதுகிறது. இன்னும் சில கட்சிகள் சரியான நேரத்தில் வரும், மரண அடி குடுப்போம். 200 சீட் கனவுதான், நிஜத்தில் அதிமுகதான் 210 ல் ஜெயிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.