1. Home
  2. தமிழ்நாடு

மதுரை மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு: இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதி

Q

தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு இன்று ( ஆகஸ்ட் 21 ) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாடு நடைபெறும் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பறை, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள் அமர்வதற்காக சுமார் 1.50 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 20 ) இரவு முதல் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்களுக்காக தனித் தனியாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான உணவும் தடபுடலாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவே மாநாட்டு திடலுக்கு வந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தப் பகுதியிலேயே தங்கினர். அவர்கள் இன்று காலை இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறைகளுக்கு சென்றனர். தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் கழிப்பறைக்கான தண்ணீர் காலையிலேயே காலி ஆனதாக கூறப்படுகிறது. இதனால், அதன் பின்னர் சென்ற பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் போதிய தண்ணீர் வசதி இன்றி அவதி அடைந்தனர். இதில், முறையான தண்ணீர் வசதி இல்லை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கீழே கிடந்த காலி குடிநீர் பாட்டில்களில் தண்ணீரை பிடித்து இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதன் காரணமாக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதில், குறிப்பாக பெண்கள் மிகுந்த அவதி அடைந்தனர். 

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடங்குவதற்கு முன்பே கழிப்பறைகளுக்கான தண்ணீரி வசதி இல்லாதது பொதுமக்கள் இடையே முகச் சூழிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும், பெண்களுக்கு போதிய இருக்கைகள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, மாநாட்டுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like