1. Home
  2. தமிழ்நாடு

கேரளா மக்களுக்கு எச்சரிக்கை..! நாளை வரை 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

1

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து அங்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. 

பலத்த மழை பெய்ய உள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நாளை 9-ம் தேதி வரை கேரளாவில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. 

மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி இன்று (8-ம் தேதி) திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை (9-ம் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கனமழையால் நகர பகுதிகளில் திடீர் வெள்ளம், மலைப் பகுதிகளில் நிலச்சரிவு, தாழ்வான பகுதிகளில் மண் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், தொடர்மழை பேரிடர்களுக்கு வழிவகுக்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

Trending News

Latest News

You May Like