மக்களே எச்சரிக்கை..! வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும்..!
டெல்லியில் இன்றும் மிக கனமழை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதன்கிழமை வரை டெல்லியில் மிகக் கனமழை பெய்யும் என்றும் இந்த வாரம் முழுவதுமே தலைநகரில் பரவலாக மழை பொழிவு இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, உத்தர பிரதேசம், ஹரியானா, மணிப்பூர், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.