1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கை! எதிர்வரும் 8 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள்!!

எச்சரிக்கை! எதிர்வரும் 8 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள்!!


நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவிவரும் நிலையில் அடுத்து வரும் 8 வாரங்கள் மிக முக்கியம் என மகாராஷ்டிர கொரோனா தடுப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் எனும் வீரியமிக்க தொற்றாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.

முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனா தொற்றால் இதுவரையில் உலக முழுவதும் 370க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் என 21 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்த ஒமைக்ரான் பரவல் குறித்து மகாராஷ்டிர கொரோனா தடுப்புக் குழுவினர் முக்கிய தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை! எதிர்வரும் 8 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள்!!

அதன்படி, ஒமைக்ரான் அலை இந்தியாவை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது 6 முதல் 8 வாரங்களுக்குள் தெரியும் என டாக்டர் ஷசாங் ஜோஷி தெரிவித்துள்ளார். இது குறித்து பீதியடையாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இந்த 8 வாரங்கள் மிக முக்கியமான நாட்கள் என்றும், பெரும்பாலும் இந்த வகை வைரஸ் பயணம் தொடர்பானதாக இருப்பதால் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாது மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like