பகீர் வார்னிங்..! பூமியை அழிக்கும் "கிலோனோவா.." அடுத்த 100 ஆண்டுக்கு புல் பூண்டு கூட விளையாது!

கிலோனோவா எனப்படும் ஒரு வன்முறை நட்சத்திர மோதலின் பேரழிவு தாக்கம் நமது கிரகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
நடத்தப்பட்ட புதிய ஆய்வில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூட்ரான் நட்சத்திரம் மோதும் நிகழ்வு எவ்வளவு அருகில் நடந்தால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் அபாயம் ஏற்படும் என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வை ஆய்வாளர்கள் கிலோனோவா என்று அழைக்கிறார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த வெடி நிகழ்வாக இதை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த கிலோனோவா நிகழ்வு காமா கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் மற்றும் எக்ஸ்-கதிர்கள் போன்ற கொடிய கதிர்வீச்சுகளை வெளியிடுவதால், அது நமது ஒட்டுமொத்த கிரகத்திற்கும் ஆபத்தான ஒன்றாக மாறுகிறது.
விண்வெளியில் ஏற்படும் மோதல், விரிவடையும் காஸ்மிக் கதிர் குமிழியை உருவாக்கத் தூண்டும், அதன் பாதையில் உள்ள அனைத்தையும் சூழ்ந்து, அதிக ஆற்றல் வாய்ந்த, சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் சரமாரியை பூமியின் மீது கட்டவிழ்த்துவிடும்.
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கும் இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஹெயில் பெர்கின்ஸ் கூறுகையில், "பூமியில் இருந்து சுமார் 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் நியூட்ரான் நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டாலும் கூட அதனால் ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளால் ஒட்டுமொத்தமாகப் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்கள் அழிந்துவிடும்" என்றார்.