இன்று மதியம் 2.15 மணி வரை காத்திருங்கள் : பரபரப்பை கிளப்பிய அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ad15b2fe504d4b935656ec7c8e32048f.jpg?width=836&height=470&resizemode=4)
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன்,
எங்கள் மடியில் கனமில்லை. பா.ஜ.க. பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள். நான் அதிமுகவின் ராஜாவாக உள்ளேன்; நான் எதற்காக பாஜகவில் சேர்ந்து கூஜா தூக்கப் போகிறேன்? எனவும் அம்மன் அர்ஜுனன் பேசியுள்ளார். கொங்கு மண்டலத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் எனவும் அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்.
இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் தனித்து நின்ற சரித்திரமில்லை. அ.தி.மு.க. தான் 2016-ல் தனித்து நின்று 37 தொகுதிகளில் வென்றோம் என பேசினார்.