1. Home
  2. தமிழ்நாடு

தொண்டர்கள் ஷாக்..! நூலிழையில் உயிர் தப்பிய திமுக எம்.பி. ஆ.ராசா..!

1

மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ ராசா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பட்ஜெட் குறித்து விளக்கமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

அங்கு மேடையில் பேசுவது கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மேடைக்கு முன்பு மின்விளக்குகள் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக எல்லா நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற மின்விளக்குகளை வைப்பார்கள். அதுபோலவே இன்றைய தினமும் வைத்திருந்தனர். ஆனால், எதிர்பாராத வகையில் பலத்த காற்று வீசியதில் மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சாய்ந்தது.

சட்டென இதைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட ராசா, அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவர் நகர்ந்த அடுத்த நொடியே மைக் மீது அந்த மின்விளக்குகள் விழுந்தது.. இதையடுத்து உடனடியாகப் பேச்சை நிறுத்திய ஆ ராசா அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Trending News

Latest News

You May Like