1. Home
  2. தமிழ்நாடு

நாளை திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து..!

1

திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு உகாதி விழா வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த உகாதி பண்டிகயை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அன்றைய தினம் பல்வேறு சேவைகளை ரத்து செய்துள்ளது. அதன்படி உகாதி தினத்தை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடத்தப்பட்டு பின்னர் கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.

காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பசுவாமி மற்றும் விஷ்வக்சேனருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சுவாமி விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் நுழைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உகாதி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி TTD நடத்தும் திருமலை ஆர்ஜித சேவை, அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் ஆகிய நிகழ்ச்சிகளை TTD ரத்து செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை TTD நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like