1. Home
  2. தமிழ்நாடு

6 ஆவது மாவட்டமாக விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

11

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. மிக்ஜம் புயல் தற்போது  சென்னையிலிருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பழனி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் விழுப்புரம் மாவட்டமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Trending News

Latest News

You May Like