விகடனுக்கு ரூ.25 லட்சம் அபராதம்..!

டி.ஆர்.பாலு பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் தனியார் நாளிதழுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2012ல் ஜூனியர் விகடன் கேள்வி-பதில் பகுதியில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறு செய்தியை வெளியிட்டதாக, 2014ல் திமுக எம்பி டி. ஆர். பாலு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், ஜூனியர் விகடன் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டி. ஆர். பாலுவுக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.